செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009

லினக்ஸ்...இதை மாற்றுவார்களா ..!

லினக்ஸ்... ஒரு தரமான operating system என்பது மட்டுமல்ல வைரஸ்கள் தாக்குதல்,Spy ware ஊடுருவல் மற்றும் Security problem என்ற எந்த தொல்லையும் இல்லாத ஒரு சிறந்த Operating System என்பதில் எந்த ஒரு சந்தேகம் இல்லை. இருந்தும் அது இன்னும் நிறைய பேரிடம் சென்று சேரவில்லை என்கின்ற ஒரு கவலை எனக்கும் உண்டு .

விண்டோஸ்... இன்று ஏற குறைய 99 % கணினிகளில் சென்றடைந்து உள்ளது . இதன் முக்கிய கரணம் அதை எளிமையாக பயன்படுத்த முடியும் என்பது மட்டுமல்ல ஒரு புதிய மென்பொருளை மிக எளிமையாக install செய்ய முடியும் என்பதால் தான்.




நான் ஒரு முறை லினக்ஸ் -இல் 'Fire fox' install செய்ய மிகவும் சிரமப்பட்டு விட்டேன் . என்னைபோன்ற கம்ப்யூட்டரில் குறைந்தது 10 மணி நேரம் உட்கார்ந்து இருபவனுக்கே இவ்வளவு கஷ்டம் என்றால் , புதிதாக கணினி துறைக்குள் வருபவர்களுக்கு Linux- யை பயன்படுத்த எவ்வளவு கடினமாக இருக்கும் என்று எண்ணி பாருங்கள் ...
என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால், லினக்ஸ் Development செய்பவர்கள் தயவு செய்து விண்டோசை போல எளிமையாக மென்பொருட்களை கையாளும் விதத்தில் உருவாக்க முயற்சிக்க வேண்டும்.
லினக்ஸ் -இல் மாயாஜாலங்கள் செய்யும் வல்லுனர்கள் "விண்டோஸ்" போலவே லினக்ஸ் -ஐ கண்டிப்பாக மாற்ற முடியும்.


அது மட்டுமன்றி புதிதாக மென்பொருட்களை உருவாக்கும் மென்பொருள் நிறுவனங்கள் அவற்றின் எல்லா வெளியிடுகளும் , எல்லா லினக்ஸ்களிலும் எளிமையாக install செய்யும் விதத்தில் உருவாக்க வேண்டும்.
அவ்வாறு செய்யும் பட்சத்தில் லினக்ஸ் தானாகவே தனக்கென்று ஒரு தனி இடத்தை பெற்று புகழ் பெற முடியும்.

திங்கள், 10 ஆகஸ்ட், 2009

வாங்க கொஞ்சம் பறக்கலாம்...

புதிய கண்டு பிடிப்புகளின் மீது எனக்கு எப்போதும் தணியாத ஆர்வம் உண்டு...

பறக்கும் கார் ...
ஹாலிவுட் படங்களில் எதிர்காலங்களில் வருவதாக தோன்றும் பறக்கும் கார்கள் என்னை மிகவும் கவந்த ஒன்று. நான் இருக்கும் பெங்களூர் ஒரு நெரிசல் நிறைந்த நகரமா இருக்கின்றது. பெங்களூர் மட்டுமல்ல சென்னை உள்பட எல்லா பெருநகரங்களிலும் இது ஒரு பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது ..
பெரும் செலவில் கட்டப்படும் மேம்பாலங்கள் மற்றும் குகை பாலங்கள்,இனிவரும் எதிர்காலத்திற்கு சரிப்படும் என்று தெரியவில்லை ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் வாகனங்களின் எண்ணிக்க இருமடங்காக அதிகரித்து வருகின்றது .


இத்தகைய ஒரு சுழ்நிலையில் பறக்கும் காரின் தேவை ஒரு முக்கியமனதாக எனக்கு தோன்றுகிறது. இதற்கான முயற்சிகள் 1960 களிலேயே தோன்றி விட்டது என்றாலும் அதன் தேவை இப்போதுதான் தெரிய ஆரம்பித்து இருக்கிறது.
இப்போது பாலங்களில் மீது முதலிடு செய்யும் அரசு பறக்கும் கார்களின் உற்பத்திக்கான ஆராய்ச்சியில் முதலீடு சேய்யுமாயின் அது சிறப்பாக இருக்கும்.
அமெரிக்காவே இன்னும் இத்தகை முயற்சிகளில் இறங்காத பொழுது நமக்கு ஏன் இந்த வேலை என்று தோன்றலாம். அது முற்றிலும் தவறான கருத்து.ஏன் என்றால் அமெரிக்கா இப்போதிருக்கும் சூழ்நிலையில் இது போன்ற முயற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்குமா என்பது சந்தேகமே ?
இத்தகைய ஒரு சூழ்நிலையில் சாலை போடுவது அதை சீர் படுத்துவது போக்குவரத்து நெரிசல் போன்றவற்றிலிரிந்து பறக்கும் கார்களின் மூலமாக நாம் முற்றிலும் நம்மால் தப்பித்து கொள்ள முடியும்.




ஏற்கனவே இஸ்ரேல் போன்ற நாடுகள் இத்தகைய முயற்சிகளில் மிகவும் மும்மரமா இருங்கி இருக்கின்றது. நினைத்து பாருங்கள் சென்னையிலோ அல்லது பெங்களூரிலோ நெரிசல் நேரங்களில் சுமார் 15 கி.மி செல்வதற்குள் குறைந்தது 2 மணி நேரம் எடுத்து கொள்கிறோம் . இத்தகை கார்கள் உருவாக்கப்பட்டால் வெறும் 10 நிமிடங்களில் விரும்பிய இடங்களை சென்றடைய முடியும் ...விபத்துகள் குறையும் ...

இது பற்றிய உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன் ...

நன்றி...
சிவா

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009

மூன்றாம் உலக போர்...

ஜப்பான் மீது அணு குண்டு வீசப்பட்டு நேற்றுடன் 64 ஆண்டுகள் ஆகிறது அதுபற்றிய ஒரு பற்றிய ஒரு சிறிய செய்தி...
அணு குண்டு ...
சும்மா பேர கேட்ட அதிருதில்ல ...
உண்மைதான்...1945 ஆண்டு ஜப்பான் மீது வீசப்பட்ட அணுகுண்டுகள் எல்லாம் இப்பொழுது அமெரிக்காவிடம் இருக்கும் அணுகுண்டுகளிடம் மண்டி இடவேண்டும்.
வகை வகையான உணவுகள் போல ஹைட்ரஜன் குண்டு நியூட்ரான் குண்டு என்று பல வகையான் அணு குண்டுகள் முன்னணி நாடுகள் பலவற்றில் இருக்கின்றன.
இப்போதிருக்கும் நிலையில் அணு ஆயுத போர் என்று ஒன்று வருமானால் , உலகில் மனித இனம் மட்டுமின்றி மற்ற அனைத்து உயிரினங்களும் முற்றிலும் அழிந்து போகும்.எந்தொரு புல் பூண்டும் தப்பிக்க முடியாது.
ஒரு தோராய கணக்கு படி அமெரிக்காவிடம் 2000-3000 , ரஷ்யாவிடம் 1500-2500 மற்ற நாடுகளிடம் மொத்தம் 500-1000 அணு குண்டுகள் இருப்பதாக தெரிகிறது.
இவை அனைத்தும் மூன்றாம் உலகபோரின் போது வீசப்பட்டால் இன்னும் 1000 ஆண்டுகளுக்கு பூமியில் ஒரு புல் பூண்டு கூட முளைக்காது .
சில ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்த விகடனில் மதனிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது அது "மூன்றாம் உலக போர் எப்படி நடக்கும் ? அதற்கு அவர் "மூன்றாம் உலகபோர் எப்படி நடக்கும் என்று எனக்கு தெரியாது ஆனால் நான்காம் உலக போர் வெறும் ஈட்டி மற்றும் அம்புகளால் தான் நடக்கும்" என்றார்.அது உண்மைதான் ,ஏனெனில் மூன்றாம் உலக போரிலேயே மனித இனம் முற்றிலும் அழிந்து போகும் என்பது தான் உண்மை...
BBC வெளியிட்டுள்ள ஒரு செய்தி படம் , இதில் ஜப்பானில் அணுகுண்டு வீசப்பட்டபோது நிகழ்ந்தாக எடுக்கப்பட்டுள்ளது...






நன்றி ...

சிவா