வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009

மூன்றாம் உலக போர்...

ஜப்பான் மீது அணு குண்டு வீசப்பட்டு நேற்றுடன் 64 ஆண்டுகள் ஆகிறது அதுபற்றிய ஒரு பற்றிய ஒரு சிறிய செய்தி...
அணு குண்டு ...
சும்மா பேர கேட்ட அதிருதில்ல ...
உண்மைதான்...1945 ஆண்டு ஜப்பான் மீது வீசப்பட்ட அணுகுண்டுகள் எல்லாம் இப்பொழுது அமெரிக்காவிடம் இருக்கும் அணுகுண்டுகளிடம் மண்டி இடவேண்டும்.
வகை வகையான உணவுகள் போல ஹைட்ரஜன் குண்டு நியூட்ரான் குண்டு என்று பல வகையான் அணு குண்டுகள் முன்னணி நாடுகள் பலவற்றில் இருக்கின்றன.
இப்போதிருக்கும் நிலையில் அணு ஆயுத போர் என்று ஒன்று வருமானால் , உலகில் மனித இனம் மட்டுமின்றி மற்ற அனைத்து உயிரினங்களும் முற்றிலும் அழிந்து போகும்.எந்தொரு புல் பூண்டும் தப்பிக்க முடியாது.
ஒரு தோராய கணக்கு படி அமெரிக்காவிடம் 2000-3000 , ரஷ்யாவிடம் 1500-2500 மற்ற நாடுகளிடம் மொத்தம் 500-1000 அணு குண்டுகள் இருப்பதாக தெரிகிறது.
இவை அனைத்தும் மூன்றாம் உலகபோரின் போது வீசப்பட்டால் இன்னும் 1000 ஆண்டுகளுக்கு பூமியில் ஒரு புல் பூண்டு கூட முளைக்காது .
சில ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்த விகடனில் மதனிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது அது "மூன்றாம் உலக போர் எப்படி நடக்கும் ? அதற்கு அவர் "மூன்றாம் உலகபோர் எப்படி நடக்கும் என்று எனக்கு தெரியாது ஆனால் நான்காம் உலக போர் வெறும் ஈட்டி மற்றும் அம்புகளால் தான் நடக்கும்" என்றார்.அது உண்மைதான் ,ஏனெனில் மூன்றாம் உலக போரிலேயே மனித இனம் முற்றிலும் அழிந்து போகும் என்பது தான் உண்மை...
BBC வெளியிட்டுள்ள ஒரு செய்தி படம் , இதில் ஜப்பானில் அணுகுண்டு வீசப்பட்டபோது நிகழ்ந்தாக எடுக்கப்பட்டுள்ளது...






நன்றி ...

சிவா

4 கருத்துகள்: